
சிலரை விசா அனுமதி பெறுவதிலிருந்து பரஸ்பரம் விடுவிப்பதற்காக இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி இராஜதந்திர, விஷேட, சேவை மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டை வைத்திருப்போருக்கு விசாக்கள் தேவையில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
Be the first to comment