
பாவித்த முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப் படுத்துமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 150 கோடி முகக் கவசங்கள் கடலுக்குள் நுழைந்துள்ளதாக அதிகார சபை யின் பொது மேலாளர் வைத்தியர் டெர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
எனவே நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற் கரையையும் பாதுகாக்க உதவுமாறும் பொதுமக்களை டெர்னி பிரதீப் கேட்டுக்கொண்டார்.
Be the first to comment