
இலங்கைக்கு உக்ரேனியர்களின் வருகை கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை வரவேற்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவல இதை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்கள், வைரஸின் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
COVID-19 இன் அச்சுறுத்தலைத் தணிக்க சுகாதார பிரிவுகள் அயராது உழைத்து வருவதாகவும், இருப்பினும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் துறைக்கு அரசாங்கம் நிலைமையை மோசமாக்கி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
சுற்றுலாப் பயணிகளின் குழுவில் நிபுணர்களும் பொதுமக்களும் சந்தேகம் கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.
Be the first to comment