
அரிசி, மா, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, ரின் மீன் உள்ளிட்ட 10
வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்
ளார்.
இந்தக் கட்டுப்பாட்டு விலையை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவ்வாறே அமுலில் வைத்திருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்து
வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Be the first to comment