
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இந்த நிலையில், காற்று மற்றும் இடிமின்னல் தாக்கங்க ளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டல வியல் திணைக்களம் அறிவு றுத்தியுள்ளது.
Be the first to comment