
நாவற்குழி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் எனும் குற்றசாட்டில் 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு திகதியும் வழங்கப்பட்டுள்ளது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
நாடுமுழுவதும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞர்களை கடுமையாக எச்சரித்து, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
அதேவேளை இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது இளைஞர்களின் வீடுகள் அருகாமையில் இருந்தமையால் பெற்றோர்கள் வந்து பிள்ளைகளை மன்னித்து விடும்படி கேட்ட போதும் பொலிஸார் அதற்கு இணங்காமல் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டனர்.
அதனால் அவ்விடத்தில் சிறு பதற்றம் நிலவிய போதிலும், பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் விடுவிப்போம் என பொலிஸார் உறுதி அளித்ததை அடுத்து பதற்றம் தணிந்தது என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
Be the first to comment