

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நாடுகளில் வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது, அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உடனடியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
தற்போது உலகின் முதலாவது கொரோனா வைரஸ் அலையே இருப்பதாகவும் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு பல நாடுகளில் குறைந்து வரும் நிலையில், மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் வைரஸ் இன்னும் பரவி வருகிறது.
அதன்படி, தற்போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வரும் நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை தலைவர் டாக்டர் மைக் ரியான், ஜெனீவாவில் நடந்த இணையம் மூலமான செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Be the first to comment